சென்னை: கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக தர வேண்டும் எனறு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். கொரோனா தடுப்பூசிக்கான செலவை பார்த்து மத்திய அரசு மலைத்து போகக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.