பு.புளியம்பட்டி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் -  கோவை தேசிய நெடுஞ்சாலையில் மக்காச்சோள பாரம் ஏற்றிய லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியிலிருந்து மக்காச்சோளம் மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி உடுமலை செல்வதற்காக நேற்று காலை சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

லாரி புஞ்சை புளியம்பட்டி அடுத்துள்ள சாணார்பதி பிரிவு அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் ஓட்டுநரை மீடடு சத்தியமங்கலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி கவிழ்ந்ததால் மக்காச்சோள மூட்டைகள் சிதறின. இந்த விபத்து குறித்து புபுளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: