பொன்னை : பொன்னை அருகே வெள்ளத்தில் அடித்துச்சென்ற சாலையால் கடந்த ஒரு வாரமாக போக்குவரத்தின்றி அப்பகுதிமக்கள் தவித்து வருகின்றனர்.நிவர் புயல் காரணமாக கடந்த வாரம் பொன்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், பொன்னை அடுத்த எஸ்.என்.பாளையம் செல்லும் சாலை பொன்னை பெரிய ஏரி நிரம்பியதால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.