கடலோர எல்லைகளை அச்சமின்றிக் காப்பவர்கள் நம் கடற்படை வீரர்கள் : பிரதமர் மோடி கடற்படை தின வாழ்த்து!!

டெல்லி கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 1971ம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போது, கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல்கள் மேற்கொண்ட தீர்க்கமான கடற்படை நடவடிக்கையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று கொண்டப்படும் கடற்படை தினத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை வீரர்களுக்கு  பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்“வீரம் நிறைந்த நமது கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கடற்படை தின வாழ்த்துக்கள். இந்திய கடற்படை  வீரர்கள் அச்சமின்றி நமது கடற்கரைகளைப் பாதுகாக்கின்றனர், மேலும் தேவைப்படும் போதெல்லாம் நம் நாட்டு மக்களுக்கு உதவி வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இந்தியாவின் வளமான கடல் பாரம்பரியத்தையும் நாம் நினைவுகூர்வோம்”, என்று கூறியுள்ளார்.

அதே போல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துச் செய்தியில், “இந்திய கடற்படை தினம் 2020 நிகழ்வில், இந்த சிறப்பான படையின் அனைத்து பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். கடல் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் நமது கடல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் இந்திய கடற்படை முன்னணியில் உள்ளது. அவர்களின் வீரம், தைரியம் மற்றும் தொழில் திறனுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: