சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,500 கனஅடி நீர் திறப்பு

சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2,000 கனஅடியில் இருந்து 2,500 கனஅடியாக உயர்த்தி நீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கத்தைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமுடிவாக்கம்,காவனூர், வழுதால்பேடு, திருநீர்மலை பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2,900  கனஅடியாக உள்ள நிலையில் 2,500  கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: