மதுரை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டு அதிமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். முன்னதாக முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கொண்டு வரும் ரூ.1,295.76 கோடி மதிப்பிலான திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை துவக்கி வைத்தார். மேலும் ரூ.30.19 கோடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடம், ரூ.15 கோடியில் மதுரை பாலரெங்காபுரத்தில் கடடப்பட்ட மண்டல புற்றுநோய் மைய கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் அவர்களும் கலந்து கொண்டார்.