இந்தியாவில் அதிகபட்சமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் பணியாற்றுவது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

டெல்லி: இந்தியாவில் அதிகபட்சமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் பணியாற்றுவது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகம் பெண் நீதிபதிகளை கொண்ட உயர்நீதிமன்றம் சென்னை  நீதிமன்றம். 63 நீதிபதிகளில் 21% பேர் பெண் நீதிபதிகள் (13). இனி இது ஆண்களுக்கான உலகம் இல்லை. பெண்கள் வாய்ப்பளிக்க தகுதியானவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: