×

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தொடரும் மருத்துவ கலந்தாய்வு: மழை நீரால் நிரம்பியது நேரு உள்விளையாட்டு அரங்கம்

சென்னை: கொட்டும் மழையிலும் தமிழக மருத்துவ கலந்தாய்வு மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில்நடைபெறக்கூடிய இந்த கலந்தாய்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் பெற்றோர்கள் வந்துள்ளனர். கலந்தாய்வு நடைபெற கூடிய வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் தேகியுள்ளது. அதனை வெளியேற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வழக்கமாக நடைபெறக்கூடிய ஓமந்தூரார் மருத்துவமனை அல்லாமல் இந்த முறை நேரு விளையாட்டு அரங்கம் என்பதால் காத்திருக்கும் இடத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. கலந்தாய்வு நடைபெறக்கூடிய இடம் முதல் தளத்தில் உள்ளதால் அங்கு மழை நீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை. அனால் மாணவர்கள், பெற்றோர்கள் காத்திருக்கும் இடத்திற்கு அருகில் மழைநீர் தேங்கி இருக்கிறது.மேலும் தேங்கியுள்ள நீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிவர் புயல் காரணமாக கடந்த வாரம் சில நாட்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை கொட்டும் மழையிலும் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 கலந்தாய்வை ஒத்திவைக்கும் முடிவு ஏதும் தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு மாவட்டக்களில் இருந்து மாணவர்களும் கலந்திவிற்க்காக சென்னை வந்துவிட்டதால் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுவது நல்லது என தெறிவித்திருக்கின்றனர். மேலும் மாணவர்கள் கலந்தாய்வு நடைபெறும் வழக்கத்திற்கு வருவதற்கு முன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அதற்க்கு பின்னரே மாணவர்கள் நேரு உல் விளையாட்டு அரங்கிற்குள் அனுமதிக்கபடுகிறார்கள். இந்த முறை காத்திருக்கும் அரங்கத்திலேயே மருத்துவ கல்வி அதிகாரிகளால் அறிவிப்பு வழங்கப்பட்டது.

கலந்தாய்வு நடக்கும் அரங்கின் நுழைவாயில் செல்லும் வரை காத்திருக்க வேண்டும் தங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தாங்களாகவே கலந்தாவில் பங்கேற்பதை தவித்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. கொரோனா காலத்திற்கு இடையில் நடைபெறாக்கூடிய கலந்தாய்வு என்பதாலும் மழைக்காலம் தொடங்கிவிட்ட காரணத்தாலும் இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி மருத்துவ குழுவும் தயார் நிலையில் உள்ளது. மாணவர்களுக்கு ஏதேனும் அறிகுறி இருந்தால் மற்றும் ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டாலும் அதனை வழங்குவதற்காக தயார்நிலையில் உள்ளது .

Tags : Nehru Indoor Stadium , Medical consultation to continue despite pouring rain: Rain flooded Nehru Indoor Stadium
× RELATED பிரைம் வாலிபால் லீக் தொடர் இறுதி...