×

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்..!!

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Communist Party of India ,Government ,Tamil Nadu ,Central , Agricultural Law, Tamil Nadu, Communist Party of India, Struggle
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்