×

முதல்வர் நிகழ்ச்சிக்காக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: முதல்வர் நிகழ்ச்சிக்காக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளார். கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை சென்றுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவை மீறி நகரின் முக்கிய பகுதிகளில் கட்அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மதுரை ஆட்சியர் அலுவலகம், கோரிப்பாளையம், செல்லூர் உள்ளிட்ட இடங்களில் முதல்வரை வரவேற்க பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.


Tags : Tropic Ramasamy ,Chief Minister ,event , CM show, banners, Tropic Ramasamy, iCourt, appeal
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...