சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரத்தில் கனமழை தொடரும். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கள்ளக்குறிச்சியிலும் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், அரியலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.