இந்தியாவில் கொரோனா நோயில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதம் 95%-ஐ நெருங்கியது!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 95.71 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 36,594 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 95,71,559 ஆக உயர்ந்தது.

* புதிதாக 540 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,39,188 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,916 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 90,16,289 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,16,082 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 94.20% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.35% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,70,102  கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 14,47,27,749 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories: