திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 7,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு ஓங்கூர் ஆற்றுத் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. மண்டகப்பட்டு, புதுப்பேட்டை, சூனாம்பேடு உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.