மன்னர் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு .: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: மன்னர் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்திற்கு தென்மேற்கு 40கி.மீ தொலைவிலும், பாம்பனுக்கு மேற்கு-தென்மேற்கில் 70 கி.மீ தொலைவிலும்  நிலை கொண்டுள்ளது. தற்போது காற்றின் வேகம் 55 கி.மீ முதல் 65  கி.மீ  வரை வீசுகிறது..! அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ  வரை வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: