×

பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்: பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு தற்போது மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவு பாம்பன் பகுதியில் நேற்று இரவு 75 கி.மீ வேகம் வரை சூறைக்காற்று வீசியுள்ளது. ஆனால் இன்று காலையில் குறைந்து 50 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. நள்ளிரவில் வீசிய பலத்த சூறைக்காற்று பாம்பன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்து கரையொதுங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : storm warning cage boom ,port ,Pamban , Number three storm warning cage boom at Pamban port
× RELATED தமிழக பகுதியில் அத்துமீறி...