மதுராந்தகம்: கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரியில் இருந்து 2,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தனது முழு கொள்ளளவான 24 அடியை எட்டி உள்ளதால் மதகு மூலம் உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் திறக்கப்பட்டதால் 18 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.