மதுரை: புரெவி புயல் காரணமாக மதுரை விமான நிலையம் இன்று நண்பகல் 12 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் மதுரை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நண்பகல் 12 மணிக்கு மேல் விமான சேவைகள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது.