சாம்ராஜ்நகர்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை வேறு மாவட்டத்துக்கு எடுத்து சென்றது தவறான செயல் என்று எம்.எல்.ஏ. புட்டரங்கசெட்டி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் சார்பாக சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ராமசமுத்ரா, காலிபுரா, உப்பாராபடவனே ஆகிய பகுதிகளில் 550 வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த திட்டம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா, பெங்களூரு பேட்டராயனபுரா ஆகிய பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.