மங்களூரு: கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 6 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது என்று அமைச்சர் கோட்டா சீனிவாஸ்பூஜாரி தெரிவித்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கடலில் படகு கவிழ்ந்து உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி தலா 6 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``மங்களூரு அருகேவுள்ள அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹6 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. அதே போல் இது போன்ற சம்பவம் மறுபடியும் நடைபெறாமல் இருக்க கடலோர பகுதிகளில் காவல் படையை பலப்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.