சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா தமட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (48). காவலரான இவர் சிக்கமகளூரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்து, தற்ேபாது கடூர் தாலுகா சக்கராயபட்டணா காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியற்றி வந்தார். அதேபோல், சிக்கமகளூரு டவுன் ராமனஹள்ளி பகுதியின் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு துணை சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைத்தது. டிச. 3ம் தேதி (நேற்று) அவர் சப்-இன்ஸ்பெக்டராக பதவியேற்க வேண்டி இருந்தது.