திருச்சி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் 8ம் நாளாக நேற்று தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி சென்று விவசாயிகளுடன் இணைந்து போராட நேற்று காலை திருச்சியிலிருந்து ரயிலில் புறப்பட்டு செல்வதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 49 விவசாயிகள் திருச்சி ஜங்சனுக்கு வந்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை தடுத்து கைது செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.