விழுப்புரம்: வேலூர், ரத்தினசிங்குலமேலாண்ட தெருவை சேர்ந்த சுப்ரமணி. இவர் மனைவியுடன் வந்து நேற்று விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: செஞ்சி அருகே அண்ணமங்கலத்தில் எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதனருகே 30 சென்ட் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அந்த நிலத்தின் வழியாக மட்டுமே என் நிலத்துக்கு செல்ல முடியும். வேறு வழி கிடையாது. இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. செஞ்சி ஏழுமலை, என்னுடைய நிலத்தை தனக்கு தருமாறு பலமுறை வற்புறுத்தினார். தொடர்ந்து இடையூறு கொடுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அவருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.