மதுரை: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் அருகே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மிகவும் குறுகலான, நெரிசல் மிகுந்த பகுதியாகும். ஆம்புலன்ஸ் வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்படும். எனவே, தென்காசி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை வேறு பகுதியில் அமைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘தமிழகத்தில் அவசரகதியில் மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. சம விகிதத்தில் பிரிப்பதில்லை. உள்கட்டமைப்பு வசதிகளை பார்ப்பதில்லை. 2 அல்லது 3 தாலுகாக்களைக் கொண்டு அரியலூர் மற்றும் பெரம்பலூரை தனி மாவட்டமாக பிரித்துள்ளனர்.