கடலூரில் விபத்தில் இறந்த மாலுமியின் குடும்பத்துக்கு 1.92 கோடி இழப்பீடு

கடலூர்: கடலூரில் விபத்தில் இறந்த மாலுமி குடும்பத்திற்கு ரூ. 1.92 கோடி இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் செந்தில் (35). கப்பலில் மாலுமியாக பணிபுரிந்தார். இவர் 2014 ஆகஸ்ட் 30ல் கடலூர் இம்பீரியல் சாலையில் பைக்கில் சென்றபோது வேன் மோதி உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இறந்த செந்திலின் மனைவி சுஜாதா மற்றும் அவரது மகள்கள் கடலூர் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.

அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி இருதயராணி நேற்று அளித்த தீர்ப்பில், விபத்தில் இறந்த செந்தில் குடும்பத்தினருக்கு ஒரு கோடியே 92 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை  7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

Related Stories: