சென்னை: பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் நான்காவது நாளான நேற்று தரவரிசை எண் 1702 முதல் 2150 வரை உள்ள 450 பேர்களுக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. 436 மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ் இடங்களை நிரப்புவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு கடந்த 18ம் தேதி தொடங்கியது. 23ம் தேதி பொதுப் பிரிவினருக்கான முதல் நாள் கலந்தாய்வு தொடங்கியது. ஒரு நாள் மட்டுமே பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், நிவர் புயல் காரணமாக கடந்த 29ம் தேதி வரை கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.