அர்ஜூன மூர்த்தி பாஜ பதவியில் இருந்து ராஜினாமா: கரு.நாகராஜன் அறிவிப்பு

சென்னை: ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன மூர்த்தி, பாஜவில் தான் வகித்து வந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் பாஜவின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவர் உடனடியாக பாஜ தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து அவரை தமிழக பாஜ தலைமை கட்சியிலிருந்து உடனடியாக அவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக பாஜ மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜ கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜூன மூர்த்தியின் ராஜினாமாவை ஏற்று, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும், அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: