சென்னை: ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன மூர்த்தி, பாஜவில் தான் வகித்து வந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் பாஜவின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவர் உடனடியாக பாஜ தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து அவரை தமிழக பாஜ தலைமை கட்சியிலிருந்து உடனடியாக அவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.