* #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல டிரண்ட் ஆகும் ஹேஷ்டேக்
அரசியல் வாய்ஸ் மட்டுமே கொடுத்து வந்த ரஜினி தற்போது களத்தில் இறங்குகிறார்: கடந்த 30-ம் தேதி மாவட்டச் செயலாளருடன் கோடம்பாக்கம் ராகேவேந்திரா திருமண மண்டபத்தில் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா என்றிருந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சுமார் 28 ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருப்புக்கு ரஜினி விடை தந்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று தமிழகத்தில் ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என பதிவிட்டுள்ளார்.