ஆரணி: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் ஆரணியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் இருக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக ஆரணியாற்றில் நீர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.