மாஸ்கோ: அமெரிக்காவின் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி மருந்துக்கு இங்கிலாந்து அனுமதி அளித்துள்ள நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை டாக்டர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செலுத்தும் பணியை அடுத்த வாரத்தில் தொடங்க அதிபர் விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ரஷ்யா கண்டுபிடித்த ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசியை அந்நாடு அங்கீகரித்தது. ஆனால் வெகுசீக்கிரத்தில் ரஷ்யா இம்மருந்தை அங்கீகரித்ததால், முறையான அனைத்து பரிசோதனைகள் செய்யப்பட்டதா என்பது குறித்து உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்தன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஸ்புட்னிக் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.