டெல்லி: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என முதல்வரிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார். தமிழக மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.