×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,603 பேர் பாதிப்பு, 501 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 36,603 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,99,413-ஆக உள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 501 பேர் புதிதாக உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 1,38,22 -ஆக உள்ளது. இந்நிலையில் 24 மணி நேரத்தில் 43,062 பேர் குணமடைந்துள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 89,32,647-ஆக உள்ளது. எனவே தற்போது 4,28,644 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Central Health Department ,India , In the last 24 hours, 36,603 people have been affected and 501 killed in India: the Central Health Department
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...