மைசூரு: மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா சவுகஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரஜ்வல். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 24-ம் தேதி சவுகஹள்ளி அருகே பைக்கில் இவரை வழிமறித்த இரண்டு பேர் பணம் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று காலை தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.