புதுடெல்லி: ஜம்முவிற்குள் 4 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற பயன்படுத்திய சுரங்கபாதை கண்டுபிடிக்க, பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவம் 200 மீட்டர் ஊடுருவி சென்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் ஜம்மு காஷ்மீருக்குள் லாரியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரின் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அமைப்பை சேர்ந்த இந்த தீவிரவாதிகள், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டு ஊடுருவியதும் தெரியவந்தது.