புதுடெல்லி: சென்னையில் உள்ள ஐசிஎப் உள்ளிட்ட ரயில்வேயின் முக்கிய பணிமனைகளை தனியார்மயமாக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும், ரயில்வே ஊழியர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், ரயில்வே ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனாலும், தனியார் மயமாக்கும் முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக ரயில்வே வாரிய தலைவரும், சிஇஓவுமான வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.