சென்னை: பேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது என அண்ணா பல்கலை. பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். பணி நியமனம், ஊதியம் போன்றவற்றில் வெளிப்படை தன்மையை பின்பற்ற வேண்டும். பேராசிரியர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாவதை தவிர்க்க யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.