டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்ற விசாரணையை விமர்சித்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.