மதுரை : தலைவர்களின் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்றக் கோரி மதுரையைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழகத்தில் அனுமதி பெற்ற சிலைகள் அருகே ஏணிகளை அகற்றவும் அனுமதி பெறாத சிலைகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைவர்களின் சிலைகள் கூண்டுக்குள் வைப்பது அவர்களை அவமதிப்பது போல் உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.