புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மணல் கடத்தியதாக கைதானவர் தப்பிக்க உதவிய ஊராட்சித் தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான வெங்கடேஷ் என்பவர் காவல் நிலையத்தில் இருந்து காரில் தப்பிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேஷ் தப்பி செல்ல உதவியதாக ஆயிங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜமாணிக்கமும் கைது செய்யப்பட்டுள்ளார்.