இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி: உயர் நீதிமன்ற கிளை வரவேற்ப்பு

மதுரை: இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி தொடங்குவது வரவேற்கத்தக்கது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. அறநிலையத்துறை தொலைக்காட்சியில் தமிழர்களின் கட்டிட திறமைகள் மற்றும் சிறப்புகளை எடுத்து கூறமுடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி தொடங்குவதற்கு தடைகோரிய வழக்கில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தனித்தொலைக்காட்சி உள்ளது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

Related Stories: