மதுரை: அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீது உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் சிலருக்கு அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆனால் வருடத்திற்கு 5 லட்சத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.