சென்னை: சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சிப் பணி அனுபவமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக தமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு 8 ஆண்டுகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் திடீரென விருப்ப ஓய்வு பெற்றார்.