டெல்லி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வகைசெய்ய இயலுமா என சட்ட அமைச்சகம் கேட்டதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக பல்வேறு வகையான ஆலோசனைகளை மத்திய சட்ட அமைச்சகமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் நடத்தி வந்தன. இதுதொடர்பாக புதிய சட்டம் கொண்டு வருவதற்காக மத்திய சட்ட அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. இந்திய தேர்தல்களை நடத்துவதற்கான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.