திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறக்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் குழு தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி கூறினார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என தெரிவித்தார். எப்போதும் வழக்கமாக ஆண்டுதோறும் பக்தர்கள் வருகையை ஒட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்த நிலையில் இந்த ஆண்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். கொரோனா தொற்று அதிகம் உள்ள காரணத்தால் பக்தர்கள் குறைந்த அளவில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதால் 10 நாட்கள் சொர்க்க வாசல் திறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.