டெல்லி: சந்தையில் கூட்டநெரிசல் இல்லாத நேரங்களில் பொருள்கள் வாங்கினால் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சந்தை, கடைகள் உள்ளிட்ட இடங்களில் நுழைவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகளை பின்பற்றலாம் எனவும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய காதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.