புதுடெல்லி: விசாரணைக் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில், கூரான ஆயுதத்தால் குத்தப்பட்டு வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது திகார் சிறையில் பதற்றம் ஏற்படுத்தியது. ஜகாங்கீர்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை தொடர்பான புகார் உள்பட 3 வழக்குகளில் தொடர்பிருப்பதாகக் கருதி தில்ஷேர் சிங்(23) எனும் வாலிபரை போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். அதே மாதம் 11ம் தேதி திகார் மத்திய சிறை எண் 3ல் அவர் அடைக்கப்பட்டார். அதே சிறையில் அடைபட்டு இருந்த விசாரணைக் கைதிகள் 3 பேர் சிங்குடன் நேற்று தகராறில் ஈடுபட்டனர். அதில், கூர்மையான ஆயுத்தால் சிங் குத்தப்பட்டார்.