சிறுமிகள் கராத்தே பயிற்சி பெறுவது அவசியம்: எஸ்.பி.இலக்கியா வலியுறுத்தல்

தங்கவயல்: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் காலகட்டத்தில், சிறுமிகள் கராத்தே பயிற்சி பெறுவது அவசியம் என்று தங்கவயல் போலீஸ் மாவட்ட எஸ்.பி.இலக்கியா கருணாகரன் வலியுறுத்தினார்.

தங்கவயல் ஒக்கினோவா கராத்தே பயிற்சி மையத்தில் கராத்தே பயிற்சி முடித்த சிறுவர், சிறுமிகளுக்கு   பயிற்சியாளர் உலகநாதன் தலைமையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கிய கேஜிஎப் போலீஸ் மாவட்ட எஸ்பி இலக்கியா கருணாகரன் பேசும் போது, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை குற்றங்கள் பெருகி வருகிறது. சிறுமிகள் கராத்தே பயிற்சி பெறுவது அவர்களை பாதுகாத்து கொள்ள உதவியாக இருக்கும். எனவே சிறுமிகள் கராத்தே பயிற்சி பெறுவது அவசியம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கராத்தே பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் சாலினி நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: