பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கடந்த 23ம் தேதி பிரதமர் மோடியின் படத்தை பாஜ கவுன்சிலர்கள் மாட்டினர். அந்த படம் அகற்றப்பட்டது. இதனை கண்டித்து நேற்று சத்திரக்குடி பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மோடியின் படத்தை ஒன்றிய அலுவலகத்தில் வைப்பதற்காக ஊர்வலமாகச் சென்றபோது, பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் தடுத்து நிறுத்தி 5 பேர் மட்டும், சென்று படத்தை கொடுக்க அனுமதி அளித்தார்.