வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த தம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (39). தனியார் மற்றும் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்கிறார். இந்நிலையில், நேற்று காலை அன்பு, வாலாஜாபாத் இந்தியன் வங்கிக்கு சென்றார். அங்கு, தனது வங்கி கணக்கில் இருந்து ₹2 லட்சம் எடுத்தார். பின்னர், அந்த பணத்தை தனது பைக் பெட்டியில் வைத்து கொண்டு தம்மனூர் கிராமத்துக்கு புறப்பட்டார். வாலாஜாபாத் ரவுண்டானா அருகே சென்றபோது, அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.