திருவள்ளூர்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் நேற்று முன்தினம் இரவு சொக்கப்பனை ஏற்றபட்டது.திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் மூலவருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் கோயில் சன்னதிகளில் தீபம் ஏற்றபட்டது.