கன மழையால் சேதமடைந்த பயிர்கள்: திமுகவினர் நேரில் ஆய்வு

பொன்னேரி: பொன்னேரியில் மழையால் சேதமடைந்த பயிர்களை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிர்வாகிகளுடன்  நேரில் சென்று பார்வையிட்டார்.  பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பிரளயம்பாக்கம்,  ஆண்டார்மடம், கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு பெய்த அடை மழையால் ஆரணி ஆற்றின் கரை உடைந்து பயிர்கள் சேதமடைந்தன.

இதனை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராசன்  தலைமையில்,  மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்,  அவைத்தலைவர் மு.பகலவன், பா.சுகுமாரன், ஜி.ரவி, கே.ஜி.பாஸ்கர்சுந்தரம், கோளூர் கதிரவன், மீவி.கோதண்டன், காசு.தன்சிங், பா.து.தமிழரசன், ஆ.ராஜா ஆ.பாளையம், அ.முனுசாமி, ரவிச்சந்திரன், கஸ்தூரிதசரதன், டி.சி.சக்திவேல், ஏகாம்பரம், டி.ஆர்.மாதவி, கா.சு.ஜெகதீசன், காசு. அண்ணதாஸ், பார்த்திபன், தத்தை  டி.வி.கிருஷ்ணன், டி.இ.நாகராஜ், துலுக்காணம்,  ப.தமிழரசன், ப.கலைவாணன், பொன்.கு.லோகநாதன். நந்தியம் ஏ.கார்த்திக், கடப்பாக்கம் நாகலிங்கம், ஆதிகேசவன், சரண்ராஜ், இ.ராஜா ஆகியோர் ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

Related Stories: